திங்கள், 27 ஜூலை, 2020

அறிஞர்களே! அறிஞர்களே! !வழக்கறிஞர்களே!


சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் ...

அன்புடையீர் வணக்கம்:

     குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் டாக்டர் ரன்பீர் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவினை கலைத்திட  வேண்டும் என்பதற்காகவும்,

      நான்கு மாதங்களாக மூடியிருக்கும் கீழமை நீதிமன்றங்களை உடனடியாக திறந்திட வேண்டுமென்றும் 22-07-2020 ம் தேதி இணையதளம் வழியாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படு,  அந்த முடிவினை வலியுறுத்துமுகமாக 
      31-07-2020(வெள்ளிக்கிழமை) காலை 11மணியளவில் ஆர்பாட்டம்  நடத்துவதென  முடிவுசெய்யப்பட்டது. 
    வழக்கறிஞர்கள் சங்கங்களின்  தலைவர்கள், செயலாளர்கள் பெருவாரியான வழக்கறிஞர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செய்வதின் மூலம் நம்மை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய போராட்டத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்ததைப்போல் அமையும். 

         எனவே 31-07-2020ம்  தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

   ப.நந்தகுமார் 
       தலைவர்
          JAAC

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..