ஞாயிறு, 3 ஜூன், 2018

சிறுவர்களே! சாட்சி!!

விளையாடிய சிறுவர்கள்
ஓடி வந்து
முச்சிறைக்க சொன்னார்கள்.
அண்ணே உங்க
வீட்டுகிட்ட பெருச்சாளி
ஒன்று செத்து
கிடக்குது என்று

வந்து சொன்னவர்களுக்கு
மதிப்பு கொடுத்து
செய்த வேலையை
போட்டு விட்டு
போய் பார்த்தேன்
பெருச்சாளி ஒன்று
செத்து கிடந்தது
இல்லை இல்லை
கொலை செய்யப்பட்டு
கிடந்தது... கொலையாளி
யாரென்று தெரியவில்லை நாட்டைக் கெடுக்கும்
பெருச்சாளியை கொல்ல
முடியாததால் வீட்டை
கெடுக்கும்பெருச்சாளியைகொன்று என்
வீட்டருகே போட்டு
விட்டார்கள்
கொலைகாரர்கள்
நல்ல வேளை நான்
கொலைகாரன் இல்லை
என்பதற்கு விளையாடிய
சிறுவர்களே சாட்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..